பல்லவி
1ராமுனி மரவகவே ஓ மனஸா
சரணம்
சரணம் 1
ராமுனி யாக3மு காசின பாப
விராமுனி ஸத்3-கு3ண தா4முனி ஸீதா (ராமுனி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமுனி/ மரவகவே/ ஓ/ மனஸா/
இராமனை/ மறவாதே/ ஓ/ மனமே/
சரணம்
சரணம் 1
ராமுனி/ யாக3மு/ காசின/ பாப/
களிப்பூட்டுவோனை/ வேள்வியை/ காத்த/ பாவங்களை/
விராமுனி/ ஸத்3-கு3ண/ தா4முனி/ ஸீதா/ (ராமுனி)
ஒழிப்போனை/ நற்குணங்களின்/ இருப்பிடமானவனை/ சீதா/ ராமனை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமுனி மரவகவே ஓ மனஸா - ராமுனி மரவகவே மனஸா ராமுனி மரவகவே ஓ மனஸா
2 - ஜக3த்பதினி ஸீதா - ஜக3த்பதினி
மேற்கோள்கள்
4 - வன-மாலி - வனமாலை அணியும் அரி - விஷ்ணு அணியும் 'வைஜயந்தி' மாலை 'வனமாலை' எனப்படும். துளசி, மல்லிகை, மந்தாரை, பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்டதாகும் வனமாலை. வைஜயந்தி மற்றும் வனமாலை பற்றி விளக்கம் நோக்கவும்.
Top
விளக்கம்
3 - கி3ரிஜா பா3ஹுனி - இச்சொற்களின் பொருள் சரிவர விளங்கவில்லை. கி3ரிஜா - மலைமகள் - பார்வதியைக் குறிக்கும். இங்கு 'பா3ஹ' என்ற சொல்லுக்கு, சில புத்தகங்களில் 'சோதரன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அச்சொல்லுக்கு அப்படிப்பட்ட பொருளில்லை. சமஸ்கிருதத்தில் 'ப4கி3னி' என்ற சொல் சோதரியைக் குறிக்கும். அதனால், தியாகராஜர் இங்கு 'பா4க3' (சோதரன்) என்ற சொல்லினை பயன்படுத்தியிருக்கலாம்.
3 - கி3ரிஜா பா3ஹுனி து3ரிதேப4 ஹருனி - சில புத்தகங்களில், இதற்கு 'பாவங்களெனும் கரிகளுக்கு சி்ங்கம்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'சிங்கம்' என்ற பொருள்பட ஏதும் சொல் இல்லை. 'கி3ரிஜா பா3ஹ' என்பதற்கு பதிலாக 'கி3ரிஜா வாஹ' என்றிருந்தாலோ, அல்லது 'து3ரிதேப4 ஹருனி' என்பதற்கு பதிலாக 'து3ரிதேப4 ஹரினி' என்றிருந்தாலோ 'சிங்கம்' என்று பொருள் கொள்ளலாம். (பார்வதியின் வாஹனம், சிங்கமாகும் : 'ஹரி' என்ற சொல்லுக்கு 'சிங்கம்' என்றும் பொருளாகும்). ஆனால் 'னி' என்ற விகுதி பயன் படுத்தப்பட்டுள்ளதால் அப்படி (சிங்கம் என) பொருள் கொள்வதற்கில்லை. எனவே, இவற்றினை, இரண்டு அடைமொழிகளாக பொருள் கொள்ளப்பட்டது.
Top
5 - ஸ்ரீ கு3ரு சரண - தியாகராஜர், இராமனை, அனுமனின் ஆசான் என்று கூறுகின்றார். இறைவனைக்காட்டிலும் ஆசானுக்கு உயர் நிலையினை அளித்து கபீர்தாசரும் பாடுகின்றார்.
"கோவிந்தனும் (இறைவன்), எனது குருவும், என் முன் நிற்கின்றனர்; எவருக்கு முதலில் வணக்கம் செலுத்துவது? - குருவுக்கே; ஏனெனில், குருதான் கோவிந்தனைக் காட்டினார்." (குருவின் கருணையின்றேல், இறைவன் நம் கண் முன்னே நின்றாலும் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது என்கிறார்.) 'கபீர்தாசரின் தோ3ஹா' - ஈரடிகள் நோக்கவும்.
களிப்பூட்டுவோன் - 'ராம' எனும் சொல்லுக்கு அப்பொருளாகும்
வாசவன் - இந்திரன்
கமல நண்பண் - பகலவன்
மலைமகள் - பார்வதி
கபாலி - சிவன்
உயர் ஆசான் - இராமனைக் குறிக்கும்
Top